கிருஷ்ணசாமி அறிவுறுத்தல் குடிநீர் பணிக்கு முன்னுரிமை மாவட்ட பஞ்., கூட்டத்தில் முடிவு

திருச்சி, பிப்.28: திருச்சி மாவட்ட பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மன் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் பிஏ (வளர்ச்சி) பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 2019-2020ம் ஆண்டு மாநில நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ஊரகப் பகுதிகளில் குடிநீர் பணிகளில் முன்னுரிமை அளித்து பணிகள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் 18 பொருள்கள் வைக்கப்பட்டது. அவை அனைத்தும் வருகை புரிந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் கருணாநிதி நன்றி கூறினார்.

Related Stories: