தஞ்சை, பிப். 28: பழிவாங்கும போக்கை கைவிடகோரி தஞ்சையி–்ல் நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடந்தது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரில் கொள்முதல் பணியாளர்களை பணிநீக்கம் செய்து பழிவாங்கும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும். நெல் கொள்முதல் பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்கள் வழங்காமல் கூடுதல் பணிச்சுமை வழங்கி பணி செய்து கொண்டு இருக்கும் பணியாளர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி பணியிலிருந்து விடுவிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.