திருவண்ணாமலை, பிப்.28: திருவண்ணாமலையில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு `பேட்டரி ஆப் டெஸ்ட்' விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் பரிசு வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று, உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு `பேட்டரி ஆப் டெஸ்ட்' போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி ெதாடங்கி வைத்தார்.இதில் திருவண்ணாமலை, போளூர், செங்கம் ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.