நாகர்கோவில், பிப்.28: கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கி தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அங்கு பாதிப்பு வெகுவாகக் குறையத் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் ஈரானில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி பலியானவர் எண்ணிக்கை அங்கு 19 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 44 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அங்கு தொழில், வேலை விஷயமாக சென்றுள்ள மீனவர்கள் உள்ளிட்டோர் பீதியடைந்துள்ளனர். அவர்கள் தாய்நாடு திரும்ப முடிவு செய்துள்ள போதிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தவித்து வருகின்றனர்.இந்தநிலையில் குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தை சேர்ந்த ஜாண் என்பவருக்கு ஈரானில் இருந்து மீனவர்கள் இது தொடர்பாக வீடியோ, ஆடியோக்களை அனுப்பி தங்களை சொந்த ஊருக்கு மீட்டுவர உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஈரானில் உள்ள மீனவர்கள் கூறியிருப்பதாவது: