செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர் இடமாற்றம்

திருச்செங்கோடு, பிப்.27:திருச்செங்கோடு அருகேயுள்ள மாணிக்கம்பாளையம் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள், முதல்வர்  (பொ) பேபி மீது பல்வேறு புகார்களை தெரிவித்து, தர்ணா போராட்டம் நடத்தினர். மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். மாணவிகளும் போராட்டத்தை கைவிட்டனர். இதனை தொடர்ந்து முதல்வர் (பொ)பேபி நாமக்கல் சுகாதார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செவிலியர் பயி்ற்சி கல்லூரி பேராசிரியை தனலட்சுமி முதல்வராக பொறுப்பேற்றார்.

Related Stories: