எரியாத மின்விளக்குகளால் முதலியார்பட்டி பஸ் நிறுத்த பகுதி இருளில் மூழ்கும் அவலம்

கடையம், பிப்.27:  கடையம் அடுத்த முதலியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையின் உள்ளேயும், வெளியேயும் உள்ள மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பஸ் நிறுத்த பகுதி இருளில் மூழ்குகிறது. இதையடுத்து மது பிரியர்கள் பயணியர் நிழற்குடையின் உள்ளேயே அமர்ந்துகொண்டு மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடன் தவிக்கும் அவலம் தொடர்கிறது. மேலும், கொள்ளை சம்பவங்களுக்கு வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பஸ் நிறுத்த பகுதியில் எரியாத நிலையில் உள்ள மின் விளக்குகளை சரிசெய்து இரவில் ஒளியூட்ட தக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: