காரைக்குடி, பிப்.27: கலெக்டர் உத்தரவிட்டும் காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ யூனிட் சீரமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.காரைக்குடி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் புதிய பஸ் ஸ்டாண்டு உள்ளது. இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ராமேஸ்வரம் உள்பட அனைத்து முக்கிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் என 250க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு ஆன்மீக தளங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சுற்றுலா தளங்கள், ஆன்மீக தளங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் நடக்கும் கருத்தரங்குகள், மாணவர் சேர்க்கை விவரங்கள் அறிய என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகளின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. நுழைவு வாயிலில் ஆண்களுக்கான கழிப்பறையில் இருந்து கடும் துர்நாற்றம் வருவதால் உள்ளே நுழையும் போதே மூக்கை பிடித்துக்கொண்டு தான் வரவேண்டும்.