ஊட்டி, பிப். 27: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டர் என்னும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பு 40 நாட்களை தவக்காலமாக கடைபிடிப்பார்கள். இதன் தொடக்க நாளான நேற்று சாம்பல் புதன் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அனுசரிக்கப்பட்டது. அனைத்து கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலையங்களிலும் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றபட்டு குறுத்தோலைகளை எரித்து எடுக்கபட்ட சாம்பலை மந்திரித்து நற்செய்தி கூறி ஆலயத்திற்கு வந்த அனைத்து கிருஸ்துவ மக்களின் நெற்றியில் பூசிவிடுவர்.