புதுச்சேரி, பிப். 27: ஏஐடியூசி புதுச்சேரி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் பெத்துச்செட்டிபேட்டையில் உள்ள சுப்பையா படிப்பகத்தில் நடந்தது. சங்க செயலாளர் ரவிச்சந்திரன் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் சங்கத்தின் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். இதில் நிர்வாகிகள் ராமலிங்கம், குழந்தைவேலு, ராமானுஜம், காந்திமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுவை அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வழங்கப்படும் இலவச துணி வகைகளுக்கான ஆர்டரை பாண்டெக்ஸ் மற்றும் பாண்பேப் நிறுவனங்களுக்கு அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் என சுற்றறிக்கை மூலம் அரசு அறிவுறுத்தி இருந்தது. அந்த சுற்றறிக்கையை அரசாணையாக வெளியிட வேண்டும்.