சாத்தூர், பிப்.26: சாத்தூர் அருகே பா.இராமசாமிபுரம் கிராமம் கலையரங்கத்தில் வைத்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து தலைமையில் இன்று காலை மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், விதவை, முதியோர் உதவித்தொகை மற்றும் அரசால் தீர்க்க கூடிய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என வருவாய் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.