இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திண்டுக்கல், பிப். 26: திண்டுக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி 2020ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (பிப்.26, புதன்) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைககள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, விவசாய கடன் என தங்களுக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: