விருதுநகர், பிப். 21: விருதுநகர் அல்லம்பட்டியில் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கடந்த 2011 ஜனவரியில் சோதனை நடத்தினர். அப்போது பாண்டியராஜன் என்பர் அரவை மில்லில் 2,750 கிலோ ரேசன் அரியை 55 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தார். ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பாண்டியராஜனை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.கடந்த 2011 மே. மாதம் விருதுநகர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.