திருச்செங்கோடு, பிப்.21: திருவாடுதிறை ஆதீனம் சார்பில், சைவசிந்தாந்த நேர்முக பயிற்சி மையம் திருச்செங்கோட்டில் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தொடக்க விழா, மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பயிற்சி மைய அமைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். சைவசிந்தாந்த பேராசிரியர் அம்பலத்தரசு கலந்து கொண்டு, திருமுறை பாடல்களை பாடி சிவவழிபாடு செய்து, பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார். இதில் அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரன், முருகேசன், பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். சைவசிந்தாந்த பயிற்சி வகுப்பு 24 மாதங்கள் நடைபெறுகிறது.