பஸ் மோதி ஒருவர் பலி

கோவை, பிப்.21:கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் அருகேயுள்ள ஆர்.ஜி.புதூர் சந்திப்பு அருகே நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: