சாத்தூர், பிப். 20: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.42 லட்சம் கிடைத்தது. தென் தமிழகத்தில் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதனை தொடர்ந்து நேற்று தை கடைசி வௌ்ளி திருவிழாவிற்கு வைத்திருந்த தற்காலிக உண்டியல் இரண்டு, ஒரு கால்நடை உண்டியல். 10 நிறந்தர உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடப்பட்டன.
அதில் ரொக்கமாக ரூ.42 லட்சத்து 18 ஆயிரத்தி 540 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.