காங்கயம், பிப்.20: மண்வள அட்டை தினத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே படியூரில் மண்வள அட்டை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மண்வள அட்டை தினம் பிப்ரவரி 19ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, வேளாண் துறை சார்பில் மண் வள அட்டை தினம் படியூரில் நடந்தது. இதில், திருப்பூர், வேளாண் இணை இயக்குநர் மனோகரன் கலந்து கொண்டு, மண் வள பாதுகாப்பு குறித்தும், மண் வளத்தை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது மண்ணின் வளத்தைக் கண்டறிந்து பயிர் செய்து மகசூலை அதிகரிக்கலாம் என கூறினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் கலந்து கொண்டு, மண்ணில் இடும் ரசாயன உரங்கள் மற்றும் களைக் கொல்லிகளால் மண்ணின் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் களைக் கொல்லிகளை அளவறிந்து, தேவைக்கேற்ப மட்டும் பயன்டுத்தி மண்ணின் வளத்தை பாதுகாக்குமாறு, கூறினார்.