அவிநாசி, பிப்.20: அவிநாசி அருகே தொரவலூர் அண்ணமார்சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை இரு தரப்பினர் சம்மதத்துடன் ஒற்றுமையாக நடத்த வேண்டும் என்று ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் அவிநாசி போலீஸ் டி.எஸ்பி. பாஸ்கரனிடம் நேற்று மனு அளித்தனர்.
அவிநாசி தாலூகா தொரவலூரில் அண்ணமார்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு சமூகத்தை சேர்ந்த 5000 பேர் வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர். இந்த சமூகத்தினருள், ஒரு தரப்பினர் மட்டும் கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மற்றொரு தரப்பினர் டி.எஸ்பி.யிடம் மனு அளித்தனர்.