வில்லியனூர், பிப். 18: புதுச்சேரி மாநிலத்தின் துணை நகரமாக வில்லியனூர் விளங்கி வருகிறது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் ேகாயில், மாதா கோயில் மற்றும் துணை ஆட்சியர் அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து போன்ற பல அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக வில்லியனூர் இருந்து வருகிறது. இந்நிலையில், வில்லியனூர் நான்குமாட வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடை மற்றும் விளம்பர தட்டிகள் போன்றவற்றை சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப் உத்தரவின்பேரில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அகற்றப்பட்டது.