புதுச்சேரி, பிப். 19: புதுச்சேரியில் சாலைகளை மேம்படுத்தவும், புனரமைப்புக்கும் மற்றும் ‘U மற்றும் “L” வடிகால் மறுசீரமைப்புக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) மூலம் சுமார் ரூ.13.89 லட்சம் பெறுவதற்கும் மற்றும் புதுச்சேரி மாநில பங்காக சுமார் ரூ.2.77 லட்சத்துக்கான நிர்வாக ஒப்புதலை முதல்வர் நாராயணசாமி அளித்துள்ளார். கடந்த காலங்களில் பருவமழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சாலைகள் பழுதடைந்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த சாலைகளை தேசிய விவசாய
மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) மூலம் மேம்படுத்தவும், புனரமைப்புக்கும் மற்றும் “U” மற்றும் L வடிகால் மறுசீரமைப்புக்கு முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.