விருதுநகர், பிப்.19: சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி விருதுநகரில் சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பழைய பஸ்நிலையம் முன்பாக சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆப்பாட்டத்தில், தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.