திருவில்லிபுத்தூர், பிப். 19: திருவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாகவும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பாகவும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி திருவில்லிபுத்தூர் ஸ்டேட் பேங்க் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்பிஐ ஓய்வு சங்கத் தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். எஸ்பிஐ ஊழியர் சங்கத்தை சேர்ந்த சையத்அலி பாத்திமா, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் வைஸ்யா வங்கி செயலாளர் குமார், சிண்டிகேட் வங்கி ஊழியர் சங்க செயலாளர் அருண், இந்தியன் வங்கி ஊழியர் சங்க செயலாளர் கார்த்திகேயன்,