விருதுநகர், பிப்.19: பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கி இருப்பதால் மீள் பணியேற்பு செய்ய கோரி சிஇஓ அலுவலக அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சிவகாசி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறி மற்ற ஒன்றிய பள்ளிகளில் பணி நிரவல் செய்யப்பட்டனர்.