பழநியில் நிதிசார் கல்வி முகாம்

பழநி, பிப். 19: பழநியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி இணைந்து நிதிசார் கல்வி முகாம் நடத்தினர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். முகாமில் அரசின் மானியக்கடன் விபரங்கள், கல்விக்கடன், விவசாய கடன் விபரங்கள், அதனை பெறுவதற்கான தகுதி, வழிமுறைகள், கடன் அட்டை, ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தும் முறை, மின்னணு பண பரிவரித்தனையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ராஜா கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: