சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாத்தூர், பிப்.18: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதிய சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதாந்திர ஒய்வூதியம் ரூ.7850, குடும்ப ஓய்வூதியம், அகவிலைபடி ஆகியவை வழங்கிட வழியுறுத்தியும், 30 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேக்க நிலை ஊதியம் வழங்கிட கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாத்தூர் கிளை தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதிய சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: