தேனி, பிப். 18: ஆண்டிபட்டி அருகே, சுப்புலாபுரத்தில் குடிநீர் தொட்டியில் அரசு வைத்த கல்வெட்டு விழுந்து படுகாயம் அடந்த சிறுமிக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேனி கலெக்டரிடம் தாயார் மனு அளித்தனர். ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கால்நடைகள் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீர் தொட்டியில் திறப்பு விழாவை குறிக்கும் கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி அப்பகுதியை சேர்ந்த காளிராஜ் என்ற கூலிதொழிலாளியின் மகள் புவனேஸ்வரி (8), குடிநீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது குடிநீர் தொட்டியில் பதித்திருந்த கல்வெட்டு சிறுமி மீது விழுந்தது. இதில், சிறுமிக்கு கால்முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டது.