காரைக்குடி, பிப்.18 : காரைக்குடி நகர் பகுதியில் உள்ள சிறுபாலங்கள் தரமற்றவைகளாக அமைக்கப்பட்டுள்ளதால் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. வெளியே தெரியும் கம்பிகள் குத்தி வாகனங்களின் டயர்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கழிவுநீர் கால்வாய்கள் சாலைகளை கிராஸ் செய்யும் இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் நகராட்சி பகுதிகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் உள்ளன. 3 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை சாலையின் அகலத்தை பொறுத்து பாலங்கள் அமைக்கப்படுகிறது. பாலங்கள் கட்டுமானத்திற்கு ஏற்ப நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. தண்ணீர் செல்லும் அளவினை கணக்கில் கொண்டு பாலங்கள் கட்ட வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் செல்லும் பகுதி என்றால் ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் உள்கூடு அகலம் இருக்க வேண்டும். இரண்டு புறங்களும் ஒன்றரை அடியில் சுவர் கட்ட வேண்டும். அதன் மேல் ஒன்று முதல் ஒன்றரை அடி கணத்துக்கு கான்கிரீட் போட வேண்டும். கம்பிக்கு மேல் மற்றும் கீழ் 4 இஞ்ச் திக்னஸ்க்கு கான்கிரீட் இருக்க வேண்டும்.