ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு, பிப். 18: நிலக்கோட்டையில் மக்கள் மருதம் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளைஞரணி செயலாளர் முனுசாமி தலைமை வகிக்க, மாவட்ட பொறுப்பாளர் பிரபுதேவா வரவேற்றார். மாணவரணி செயலாளர் மகாராஜன், கிளை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அருண்பாண்டி, இந்திரமடாவதி ராஜாதேவேந்திரர், மாநில ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில்

நிலக்கோட்டை பஸ்நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்ககுடும்பனார் பெயரை வைக்க கோரியும், தேவேந்திரர்களின் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வழங்க கோரியும் எஸ்சி பட்டியிலிலிருந்து நீக்க கோரியும் கோஷமிட்டனர். மாவட்ட விவசாய அணி சுப்பிரமணி நன்றி கூறினார்.

Related Stories: