புதுச்சேரி, பிப். 18: துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆலோசனை நடத்தினார்.புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற 26ம்தேதி புதுச்சேரி வருகிறார். அவரது வருகையையொட்டி காலாப்பட்டில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று தனது அலுவகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் மற்றும் அனைத்து காவல் பிரிவுகளின் எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.