பெரணமல்லூர், பிப்.18: சேத்துப்பட்டு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.சேத்துப்பட்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிடும் மர்ம ஆசாமிகள, பகல் நேரத்திலேயே வீடு புகுந்து, உட்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு திருடிவிட்டு, பின்புறமாக வெளியேறி விடுகின்றனர்.கடந்த சில நாட்களில் மோரக்கணியனூர் பகுதியில் மின்வாரிய ஊழியர் சந்திரசேகர் என்பவரது வீட்டில் 20 சவரன் நகைகள், தேவிகாபுரம் பகுதியில் தினேஷ்குமார் என்பவரது வீட்டில் 50 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் ரொக்கம், பெரணம்பாக்கம் பகுதியில் துணைத்தலைவர் சத்தியநாதன் என்பவரது வீட்டில் 10 சவரன் நகைகள், ₹25 ஆயிரம் ரொக்கம் என இதுவரை சுமார் 80 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் வரை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.