திருவில்லிபுத்தூர், பிப்.17: ஐ பிளஸ் ஒலிம்பியாட் என்ற நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான பல்வேறு விதமான திறனாய்வு போட்டிகளை நடத்தியது. இப்போட்டியில் திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று தேசிய, மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு பரிசுகளைப் பெற்றனர். அவர்களுக்கு மகாத்மா வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முருகேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியை அங்காள ஈஸ்வரி வரவேற்றார்.