திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திருவில்லிபுத்தூர், பிப்.17: ஐ பிளஸ் ஒலிம்பியாட் என்ற நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான பல்வேறு விதமான திறனாய்வு போட்டிகளை நடத்தியது. இப்போட்டியில் திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று தேசிய, மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு பரிசுகளைப் பெற்றனர். அவர்களுக்கு மகாத்மா வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முருகேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியை அங்காள ஈஸ்வரி வரவேற்றார்.

திருவில்லிபுத்தூர் ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் ராஜசேகர், ஜெஸிலா ஏஞ்சலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தி பேசினர். பள்ளி ஆசிரியை லிசா ஜெயராஜ் நன்றி கூறினார்.

Related Stories: