சாத்தூர், பிப்.17: சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் மூடப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க உடனே நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகராட்சி சார்பில் பொதுமக்கள் நலன்கருதி முக்குராந்தல், நகராட்சி காலனி அருகே இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன. சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் நலன்கருதி இந்த இரண்டு இடங்களிலும் கழிப்பறை கட்டப்பட்டன. அவை சில நாள்கள் மட்டுமே செயல்பட்டு வந்துள்ளன. முக்குராந்தல் பகுதியில் பல நாள்களாக செயல்பட்டு வந்த கழிப்பறை தற்போது நகராட்சி நிர்வாகத்தால் சீரமைப்பு பணிக்காக பூட்டப்பட்டது.