கோத்தகிரி, பிப். 17: கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் சரியான உணவு தேர்வு செய்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மணி தலைமை வகித்தார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் கோமதி வரவேற்றார்.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசுகையில், ‘‘உணவுகளை தேர்வு செய்யும் போது சரியான ஊட்ட சத்து உள்ள உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். விளம்பரங்களில் வருபவை அனைத்தும் கற்பனை காட்சியே. உடல், மனம் வளர்ச்சி பெற, நாம் சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். வைட்டமின் குறைபாடுகளை போக்க ஊட்ட சத்துக்களை சேர்த்து செறிவூட்டிய உணவுகளை அதிகம் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அயோடின், வைட்டமின்கள், இரும்பு சத்துக்களை நாம் அதிகம் பயன்படுத்தும் உணவுகளில் சேர்த்து தருகிறது. காலாவதி உணவுகள், கலப்பட உணவுகளை கண்டறிந்து உணவு துறை அல்லது கலெக்டருக்கு புகார் அனுப்ப வேண்டும்,’’ என்றார்.