திருவண்ணாமலை, பிப்.17: திருவண்ணாமலையில் கார் வாங்குவதாக கூறி பேட்டரி கடைக்காரரிடம் ₹6 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை தேரடி வீதியில் வசிப்பவர் பாபு(42). இவர் திருவண்ணாமலை அம்மணியம்மன் கோபுர தெருவில் பேட்டரி சர்வீஸ் கடை வைத்துள்ளார். திருவண்ணாமலை ராமலிங்கனார் 6வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(42). இவர் திருவண்ணாமலையில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.ெதாழில் ரீதியாக இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அண்ணாமலை, பாபுவிடம் தான் சலுகை விலையில் கார் வாங்கப்போவதாகவும், அதனால் `தனக்கு ₹6 லட்சம் கடன் வேண்டும், அந்த பணத்தை 2 மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்'''' என்று கூறினாராம்.அண்ணாமலை மீது இருந்த நம்பிக்கையின் அடிப்படையில் பாபு, கடந்த 1.9.18 அன்று ₹6 லட்சம் கடன் கொடுத்தாராம். ஆனால் அண்ணாமலை, அந்த பணத்தை கொண்டு கார் வாங்காமல் வேறு வகையில் செலவழித்தாராம். இதுகுறித்து தெரியவந்ததும், `நீதான் கார் வாங்கவில்லையே அந்த பணத்தை திருப்பி கொடு' என்று அண்ணாமலையிடம் பாபு கேட்டாராம். ஆனால் அண்ணாமலை, பணத்தை திருப்பி கொடுக்காமல் பொய்யான காரணங்களை கூறி காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது