கலசபாக்கம், பிப்.17: கலசபாக்கம் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார். மரணத்திலும் இணை பிரியாத தம்பதியின் பாசம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(97). இவரது மனைவி வீரகங்கா(80). இவர்களது மகன் காளியப்பன்(60). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். காளியப்பனின் மகள் மகேஸ்வரி(30), அவரது கணவர் ஏழுமலை ஆகியோருடன் ஜெயராமன் தம்பதி வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் மற்றும் குடும்பத்தினர் உணவு சாப்பிட்டதும் வழக்கம்போல் தூங்க சென்றனர். நள்ளிரவு 1 மணியளவில் திடீரென எழுந்த ஜெயராமன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது, வீட்டிலேயே உயிர் பிரிந்தது.