மாமல்லபுரம், பிப். 17: மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்களான வெண்ெணய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவைகளை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறுகையில், “பிரதமர் மோடி மற்றும் சீன நாட்டு அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினர். பின்பு, புராதான சின்னங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.