திண்டுக்கல், பிப். 13: வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால், குழந்தைகளுக்கு வேர்க்குரு போன்ற தோல் நோய் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால், தோட்டம் மற்றும் காடுகளில் கூலிவேலை செல்வோர், டூவீலரில் வியாபாரம் செய்வோர் மற்றும் திறந்த வெளிகளில் வேலை செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் பெரும்பாலான தெருக்களில் சிமென்ட் சாலை, பேவர்பிளாக் சாலை, தார்ச்சாலையாக மாறியுள்ளது. பெரும்பாலான தெருக்களில் மரங்களும் இல்லை. வெயிலின் உக்கிரத்தால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜனநடமாட்டமே குறைவாக உள்ளது.