வத்தலக்குண்டு, பிப். 13: வத்தலக்குண்டுவில் டெல்லி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லியில் ஜாமியா மில்லிய பல்கலைக்கழக மாணவர்கள் அறவழியில் போராடி கொண்டிருந்தனர். இவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி வத்தலக்குண்டுவில் ஜிம்ஆ பெரிய பள்ளிவாசல் அருகே தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. தமுமுக நகர தலைவர் இம்தியாஸ் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலாவுதீன் முன்னிலை வகித்தார்.