பொள்ளாச்சி,பிப்.13:பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசிமாத தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முழுவதும் மிகவும் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டிற்கான மாசிமாத தேர்திருவிழா, முன்தினம் இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அன்று இரவு 9மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. அப்போது மேளதாளம் முழங்க, பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி கோயிலை சுற்றி வந்து, கோயில் முன்புள்ள பீடத்தில் நோன்பு சாட்டி வழிப்பட்டனர். மார்ச் மாதம் 9ம் தேதி வரை நடக்கும் திருவிழாவையொட்டி, காலை மற்றும் மதியம், இரவு என மூன்று நேரமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. இதில், வரும் 18ம் தேதி இரவில், கோயில் முன்பு திருக்கம்பம் நடப்படுகிறது.