தென்காசியில் பல்வேறு அமைப்பினர் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தனர்

தென்காசி, பிப்.13:  தென்காசியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தனர். தென்காசியில் வாவாநகரம் ஹனிபா, அலியார், பொட்டல்புதூர் காதர், தென்காசி சுலைமான், ரிசவுமுகமது, இஸ்மாயில், ஜமால் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தேசிய தலைவர் காதர் மொகிதீன் முன்னிலையில் இணைத்துக்கொண்டனர்.  நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ, மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட செயலாளர் இக்பால்,  மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராகிம், தலைமை நிலைய பேச்சாளர் முகம்மது அலி,  நகர தலைவர் அபுபக்கர், நகர செயலாளர் முகமது உசேன், எஸ்டியூ சேக்மைதீன் என்ற சேட் பாய், விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் இப்ராகிம் ஷா, புளியங்குடி சாகுல் ஹமீது, காதர்மைதீன், தமீம் அன்சாரி,  அப்துல்காதர், ஹைதர் அலி, உதுமான், செய்யது முகம்மது, முகம்மது கோயா, ரகுமத்துல்லா, செய்யது பட்டாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: