ராஜபாளையம், பிப். 12: கொரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: பொதுவாகவே வைரஸ்கள் வெயில் அதிகம் இருக்கும் போதும், அதிக வெப்பநிலையிலும் இறந்து விடும். இதில் கொரோனா வைரஸ் எப்படிப்பட்ட வெப்பத்தை தாங்கும் என்பதை உறுதி செய்ய சில காலம் அவகாசம் தேவைப்படுகிறது. இருப்பினும் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளை கையாள வேண்டும். குறிப்பாக பன்றிக்கறி, ஆட்டு ரத்தம், ஈரல், சுவரொட்டி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் கைகளை தினமும் 30 முறை லிக்விட் போட்டு கழுவ வேண்டும். சோப்பு போடக்கூடாது. சோப்பினை ஒருவர் கையில் தேய்க்கும் போது, கையில் உள்ள கிருமி சோப்பில் ஒட்டியிருக்கும். இதனை மற்றவர்கள் பயன்படுத்தும் போது பரவும் வாய்ப்பு அதிகம். இதனால் லிக்குவிட் தான் பாதுகாப்பானது. 30 முறை கை கழுவ முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 13 முறை கை கழுவ வேண்டும்.