ஈரோடு, பிப். 12: கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் இந்த பகுதியில் நடைமுறைப்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் வரவேற்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை தாக்கிய வெள்ளை ஈக்கள் இன்று தமிழகத்தில் அதிக அளவில் தென்னை மரங்களை தாக்க தொடங்கி விட்டது.