சிதம்பரம், பிப். 12: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல் துறையில் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. உளவியல் துறையின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் அஸ்கர் அலி படேல் வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக தன்னம்பிக்கை மற்றும் சுய ஒழுக்கம் பற்றி கடல்சார் உயிரியல் புல முதல்வர் முனைவர் ஸ்ரீநிவாசன் உரையாற்றினார். இதையடுத்து பயிற்சி மற்றும் அமர்வு இயக்குநர் முனைவர் கிருஷ்ணசாமி கால நிர்வாகம் மற்றும் இலக்கு நிர்ணயம் பற்றி பேசினார். முகாமில் முக்கிய அம்சமாக தேசிய பயிற்றுநர் முனைவர் சிவக்குமார், தற்குறிப்பு தயாரிப்பு மற்றும் நேர்காணல் திறன்கள் பற்றி விரிவான முறையில் உரையாற்றினார்.