மேல்மலையனூர், பிப். 12: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏதுவாய்பேட்டை கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (52 )என்பவர் வெளிமாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.