உளுந்தூர்பேட்டை, பிப். 12: உளுந்தூர்பேட்டை அருகே கல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் மனைவி ஜெயலட்சுமி (27). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், அவரது மனைவி ராஜவள்ளி, உறவினர் வளையாபதி ஆகிய 3 பேரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக திட்டி ஜெயலட்சுமியை ஜல்லிக்கரண்டியால் தலையில் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமிக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருநாவலூர் காவல்நிலையத்தில் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜவள்ளி உள்ளிட்ட 3பேர் மீதும் சப்இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிந்து ராமலிங்கம்(43), வளையாபதி(40) ஆகியோரை கைது செய்தார்.