புதுச்சேரி, பிப். 12: மனைவி குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டதால் விரக்தியடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை லாஸ்பேட்டை புதுப்பேட்டையில் வசிப்பவர் முகமது ஹமீப் (48). இவரது மகன் முகமது ஆஷிப் (48). டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. சமீபகாலமாக முகமது ஆஷிப் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வரவே தம்பதியிடையே சண்டை ஏற்பட்டதாம். இதன் காரணமாக சமீபத்தில் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி, தனது குழந்தையுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.