குடும்பம் நடத்த மனைவி மறுப்பு தூக்குபோட்டு டிரைவர் சாவு

புதுச்சேரி, பிப். 12: மனைவி குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டதால் விரக்தியடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை லாஸ்பேட்டை புதுப்பேட்டையில் வசிப்பவர் முகமது ஹமீப் (48). இவரது மகன் முகமது ஆஷிப் (48). டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. சமீபகாலமாக முகமது ஆஷிப் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வரவே தம்பதியிடையே சண்டை ஏற்பட்டதாம். இதன் காரணமாக சமீபத்தில் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி, தனது குழந்தையுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனிமையில் வாடிய முகமது ஆஷிப், சில தினங்களுக்கு முன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முகமது ஆஷிப், வீட்டில் மனைவி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இது குறித்து லாஸ்பேட்டை எஸ்ஐ ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: