புதுச்சேரி, பிப். 12: புதுவை உழவர்கரை மடத்து வீதியில் வசிப்பவர் பிஸ்கோத் சூசைநாதன். இவரது மகன் பிஸ்கோத் செல்வராஜ் (29). பொறியியல் பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இதனிடையே செல்வராஜ் கட்டிட காண்ட்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் தனது அக்காள் மேரி ஜாக்குலினிடம் வேலை நிமித்தமாக வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வந்தவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. வழக்கம்போல் வேலைக்காக வெளியில் தங்கிவிட்டு செல்வராஜ் வீடு திரும்புவார் என்பதால் பெற்றோரும் அதை பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளனர்.