காடையாம்பட்டி, பிப்.11: காடையாடம்பட்டி அருகே அரசு பஸ், மினி லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் டிரைவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் 3 பயணிகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை துறையூரை சேர்ந்த டிரைவர் சிவா ஓட்டி வந்தார். அப்போது கோவையில் இருந்து பெங்களூருவுக்கு கெமிக்கல் கேன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியின் முன்பக்க டயர் வெடித்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலையில் சென்றது. அப்போது பஸ் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் மினி லாரி டிரைவரான நல்லம்பள்ளியை சேர்ந்த சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார்.