ராசிபுரத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ராசிபுரம், பிப்.11: ராசிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், உட்கோட்ட காவல்நிலையங்களான ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் உள்ளிட்ட காவல்நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் இருந்து வழக்குகளை கொண்டு வரும் தலைமை காவலர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இதே பணியில் உள்ளனர். இவர்கள், வழக்குகளை விரைந்து முடிக்க சாட்சிகளிடம் பணம் பெறுகிறார்கள் மற்றும் ஒரு சில வழக்கறிஞர்களுக்கு சாதகமாக நடந்து கொள்லதாப புகார் எழுந்தது. இதுகுறித்து ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மாவட்ட எஸ்பி மற்றும் ராசிபுரம் டிஎஸ்பிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று குற்றவியல் வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குகளில் எதிலும் ஆஜராகாமல் வெளிநடப்பு செய்தார்கள். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.

Related Stories: