திருச்செங்கோடு, பிப்.11: திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா மருத்துவமனை வளாகத்தில் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆலோசனை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. சிறப்பு மருத்துவர் டாக்டர் விமலா கதிர்வேல் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பெணகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். ரத்த அளவு, சர்க்கரை அளவு, தைராய்டு பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அடிவயிறு ஸ்கேன் ஆகியவை இலவசமாக செய்யப்பட்டன. இந்த முகாம் வரும் 16ம் தேதி வரையிலும் நடக்கிறது. மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் மற்றும் சிசேரியன் வசதி உள்ளதாகவும், 24 மணி நேரமும் பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.