தேசிய கபடி போட்டிக்கு வீரர்கள் வழியனுப்பு விழா

புதுச்சேரி,  பிப். 11: அரியானா மாநிலம் ரோத்தாகில் 46வது ஜூனியர் தேசிய கபடி  சாம்பியன்ஷிப் போட்டி 13ம்தேதி முதல் 16ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில்  புதுச்சேரி மாநில ஜூனியர் (சிறுவர்-சிறுமியர்) கபடி அணி பங்கேற்கிறது.  இதற்காக தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பும்  விழா கபடி சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.  தொழிலதிபர் கீதா  வேலழகன் தலைமையில் முன்னாள் கபடி சங்கத் தலைவரும், டிராபிக்  இன்ஸ்பெக்டருமான ஜெயராமன் புதுச்சேரி அணி வீரர்களுக்கு சீருடைகளை வழங்கி  வழியனுப்பி வைத்தார். இதில் கபடி சங்க தலைவர் சண்முகம், பொதுச்செயலாளர்  தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: